எழுபதுகளிலும் எண்பதுகளிலும் டீனேஜ் பருவத்தில் இருந்த எல்லா தமிழர்களும் கணேஷ் வசந்த் கதைகளை தேடி தேடி படித்தோம். அதுவும் டீனேஜ் தமிழச்சிகள் வசந்த் என்றால் உயிரையே விடுவார்கள். வார இதழ்களில் தொடர்கதையாக வரும்போது எப்போது அடுத்த இதழ் வரும் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருப்போம். வந்ததும் யார் முதலில் படிப்பது என்று பெரிய சண்டையே நடக்கும். அந்த பக்கங்களைக் கிழித்து பைண்ட் செய்வது, இரவல் கொடுக்கும் வாங்கும் சாக்கில் சைட்டடிப்பது என்று பல விதங்களில் உபயோகப்படுததுவோம். பிறகு மாத நாவல்கள் வர ஆரம்பித்தத்தும் யாராவது ஒருத்தர் வாங்கினால் அதை ஒரு பத்து பேராவது படிப்போம்.
சுஜாதா எழுதிய அத்தனை கணேஷ் வசந்த் கதைகளைப் பற்றியும் இங்கே குறிப்பு எழுத உத்தேசித்திருக்கிறேன். லிஸ்ட் கொடுத்து உதவினாலோ, இல்லையேல் நீங்களும் பங்கு பெற விரும்பினாலோ ரொம்ப சந்தோஷமாக இருக்கும்…
மார்ச் 24, 2010 at 9:49 மு.பகல்
“தமிழ்த் திரைப்படங்களில் பெரிதும் கொலை செய்யப்பட்ட சுஜாதாவின் கதை எது?” என்று ஒரு பதிவு போடுமாறு கேட்டுக் கொல்கிறேன்.
- சிமுலேஷன்
நவம்பர் 3, 2010 at 4:45 மு.பகல்
எல்லாவற்றையும் எழுத முயற்சி செய்து, ஒரு இடுகையில் சாத்தியப்படுத்தியிருக்கின்றீர்கள்.
இந்த தள அமைப்பில் அப்படியென்ன மோகம். உங்களின் சில வலைப்பூக்கள் இதே தள அமைப்பிலேயே இருக்கின்றனவே!.